சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டையில் வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து, நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அடையாறில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அசன் மவுலானாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முன்னதாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்த ராகுல்காந்திக்கு அசன் மவுலானா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அசன் மவுலானா பேசியதாவது, “வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் எனக்கு பொதுமக்கள் உற்சாக அளிப்பது எனக்கு நம்பிக்கை தந்துள்ளது. வேளச்சேரியில் அடிப்படை பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க மக்களின் சேவகனாக என்றும் இருப்பேன். எனது வெற்றிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்துள்ளார்.