சென்னை: தாம்பரம் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பீர்க்கன்கரனை பகுதியில் உள்ள 15 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சின்னையா பேசுகையில், “எடப்பாடியால் தான் பீர்க்கன்கரனை ஏரி தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்பட்டது. இதேபோல், ஜி.எஸ்.டி.சாலை, பீர்க்கன்கரனை ரயில்வே மேம்பாலம் பணிகளுக்கான இணைப்பு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து சாலைகளும், தெருக்களும் தார்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. எடப்பாடி அரசு அமைந்தவுடன் அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள, பள்ளி மாணவர்களுக்கு தினமும் பால், குடும்ப அட்டைதாரர்களுக்கு வாஷிங்மெஷின், ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்படும்.