காஞ்சிபுரம்: சென்னையில் இருந்து இன்று காலை ஆரணிக்கு ராணுவ வாகனம் மற்றும் அரசு பஸ்சில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் புறப்பட்டனர். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுச்செட்டி சத்திரம் பகுதியில் 8.30 மணிக்கு வந்துகொண்டிருந்தது. இந்த பகுதியில் நான்கு வழிப்பாதையை ஆறு வழி பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக கனரக இயந்திரங்கள் சாலை ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ராணுவ வீரர்களை ஏற்றி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கனரக இயந்திரம் மீது மோதியது. இதில் 15க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.