மதுரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையை ஒட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சீர்மரபினர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சீர்மரபினருக்கான டி.என்.டி. சான்றிதழிலில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவும், கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை அறிவிக்கக் கோரியும் சீர்மரபினர் நல சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.