சென்னை: மார்ச் 31ம் தேதி திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்குகிறார். ஏப்.2ல் ஈரோடு சித்தோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகிறார். ஏப்.2 மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகிறார். அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
