விவசாயிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளோம்: திருக்கழுக்குன்றத்தில் ராமதாஸ் பேச்சு

சென்னை: திருப்போரூர் தொகுதி  பாமக வேட்பாளர் திருக்கச்சூர் கே.ஆறுமுகத்தை ஆதரித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் திருக்கழுக்குன்றத்தில் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது: தற்போது,  கொரோனா பரவல் வெளியில் அதிகளவில் உள்ள  காரணத்தால், என்னால் மேடையில் ஏறி உங்களை பார்த்து பேச முடியாத நிலை உள்ளது. உங்களையும், என்னையும் இந்த கொரோனா பிரித்து விட்டது. எடப்பாடி பழனிசாமியும், நானும் விவசாயி, இரு விவசாயிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து இருக்கிறோம்.

 அதிமுக தேர்தல் அறிக்கை அமுத சுரபி, பாமக தேர்தல் அறிக்கை வளர்ச்சி ஆயுதம், பாமக வெற்றி பெற்றால் திருக்கழுக்குன்றத்தில் அரசு கலை கல்லூரி, மாமல்லபுரத்தில் சிற்பிகள் நகரம், திருப்போரூரில் அரசு பாலிடெக்னிக், கானத்தூரில் மீன் இறங்கு தளம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும். மேலும், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முயற்சி எடுப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: