சென்னை: திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் திருக்கச்சூர் கே.ஆறுமுகத்தை ஆதரித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் திருக்கழுக்குன்றத்தில் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது: தற்போது, கொரோனா பரவல் வெளியில் அதிகளவில் உள்ள காரணத்தால், என்னால் மேடையில் ஏறி உங்களை பார்த்து பேச முடியாத நிலை உள்ளது. உங்களையும், என்னையும் இந்த கொரோனா பிரித்து விட்டது. எடப்பாடி பழனிசாமியும், நானும் விவசாயி, இரு விவசாயிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து இருக்கிறோம்.