சென்னை: பெரம்பூர் சிறுவள்ளூர் சாலையில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) சங்க பொது செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் வீடு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை 6 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் படையினர் பிரகாஷின் வீட்டுக்குள் நுழைந்து, சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சில ஆவணங்களை மட்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பிரகாஷ் சொந்தமாக பாலாஜி குளோபல் சொல்யூஷன் என்ற பெயரில் ஐடி கம்பெனி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் 3 மணி நேரம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.