புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி மழை நீர் சேகரிப்பு குறித்த பிரசாரத்தை நேற்று தொடங்கி வைத்தார். உலக தண்ணீர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் ‘‘மழை நீர் சேகரிப்பு” பிரசாரத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் பெரும்பான்மை மழைநீர் வீணாவது கவலைத்தரக்கூடிய விஷயமாகும். எவ்வளவு அதிகமாக மழைநீர் பாதுகாக்கப்படுகின்றதோ, அதனை பொறுத்து நிலத்தடி நீர் மட்டம் உயரும். பருவமழை காலம் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதியானது மழைநீரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இந்தியாவின் தன்னிறைவு என்பது அதன் நீர் ஆதாரங்கள் மற்றும் நதிகள் இணைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது. செயல்திறன் மிகுந்த நீர் பாதுகாப்பு இல்லாமல் துரிதமான வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.
பொதுமக்கள் தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும்.