பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்தலில் 50 பேர் களத்தில் உள்ளனர். வருகிற 28ம்தேதி காலை 9 மணி முதல் பகல் 4 மணிவரை திருவள்ளுவர் சிலை அருகேயுள்ள ஆர்பிஎன்எஸ் கல்லூரியில் வாக்குகளை பதிவு செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரி சதாசிவா கேட்டுக்கொண்டுள்ளார். பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு கோ.தாமோதரன், தாஸ், தரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கோ.தாமோதரன் தலைமையிலான அணியில் செயலாளராக ராமசுப்பிரமணியன், துணை தலைவராக ராஜன், பொருளாளராக மணிகண்டன்( டீமணி), துணை செயலாளர்களாக சுரேஷ்குமார், பழனிச்சாமி, வெள்ளத்துரை மற்றும் பேரா.கோவிந்தராசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பிற்கு சண்முகம், சிவராமன், மணி, விஜயலட்சுமி, ராஜ்குமார், கிருஷ்ணவேணி, கருப்பசாமி, டாக்டர் எஸ் ஞானகுரு, குகவேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இது போல் தாஸ் மற்றும் ஸ்ரீதரன் அணியில் துணை தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என போட்டியிட்டுள்ளனர். பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தலில் மொத்தம் 51 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.