சென்னை: ‘ராமசாமி கோப்பை’ ஹாக்கிப் போட்டி மார்ச் 29ம் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து எஸ்ஆர்எம்சி விளையாட்டு அறிவியல் மையத்தின் ஹாக்கி பிரிவு இயக்குநரும், ஒலிம்பியனுமான வி.பாஸ்கரன் கூறியதாவது: எஸ்ஆர்எம்சி நிறுவனத்தின் என்பிவி ராமசாமி ஹாக்கி மையம் சார்பில் ‘என்பிவி ராமசாமி உடையார் கோப்பை’ ஹாக்கிப் போட்டி, மார்ச் 29ம் தேதி தொடங்கி ஏப்.9ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நாளான ஏப்.6ம் தேதி போட்டிகள் நடைபெறாது. எஸ்ஆர்எம்சி வளாகத்தில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட செயற்கைப் புல்தரை களத்தில் போட்டிகள் நடைபெறும்.