திருப்பூர் : திருப்பூர், அவினாசி ரோடு பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் லாரியில் கொண்டு வரப்பட்ட 252 கிலோ மூட்டை அரிசியை நேற்று தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஏ.பி. சிக்னல் பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். லாரியை பெருந்தொழுவை சேர்ந்த கொசுரா (36) என்பவர் ஓட்டி வந்தார். குமார் நகருக்கு செல்வதற்காக லாரி வந்துள்ளது.