சென்னை. திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினருக்கு கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருப்போரூர் தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கோதண்டபாணி தகுதியிழப்பு செய்யப்பட்டார். தொடர்ந்து, 2019ல் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த செந்தில் என்கிற இதயவர்மன் வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த தேர்தலில் சீட் கேட்டு முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். தண்டரை மனோகரன் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவர். அதன் அடிப்படையில் தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கேட்டிருந்தார். அதிமுக மாவட்ட செயலாளரான திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் கடந்த 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த செந்திலிடம் தோற்றவர். இதனால் தனக்கு மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டிருந்தார்.