காரைக்குடி: மாசி-பங்குனி திருவிழாவை முன்னிட்டு, காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம் நடந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ளது ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில். மாசி மற்றும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, இந்த கோயிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. முன்னதாக காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.