டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த மறுப்பால் எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.