ஆற்றில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை பிளாஸ்டிக் பையில் சுமந்து சென்ற தந்தை: ஆம்புலன்ஸ் வழங்க போலீஸ் மறுப்பு

பாட்னா: பீகாரில் ஆற்றில் மூழ்கி இறந்த 3 வயது சிறுவனின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்காத போலீசார், பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுத்து அனுப்பியது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கதிகர் கிராமத்தை சேர்ந்த ஒருவரின் 3 வயது மகன் அருகில் உள்ள ஆற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்ட தந்தை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கதிகர் கிராமத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் இந்த மருத்துவமனை உள்ளது. ஆனால், குழந்தையின் சடலத்தை கிராமத்துக்கு எடுத்துச் செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகமும், போலீசாரும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்க மறுத்தனர். மேலும், சிறுவனின் சடலத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு, தந்தையிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர். அவர் தனது குழந்தையின் சடலம் இருந்த பிளாஸ்டிக் பையை 3 கிமீ தூரத்துக்கு சுமந்தபடி, வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இச்சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories: