பாலக்காடு: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயில் திருவிழா நேற்று முன்தினம் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான குருவாயூர் கோயில் திருவிழா கடந்த 24ம் தேதி யானைகள் ஓட்டப்பந்தயத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விழாவிற்கு பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தன. சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பிரகாரத்தில் நின்றபடியே பக்தர்கள் உற்சவரை வழிபட்டு சென்றனர்.