தேமுதிக சார்பில் போட்டியிட எல்.கே.சுதீஷ் விருப்ப மனு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு கடந்த 25ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அவரது மகன் விஜயபிரபாகரன்  உள்பட ஏராளமானோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.  இறுதி நாளான நேற்றும் நிறைய பேர் விருப்ப மனுக்களை அளித்தனர்.  குறிப்பாக, ேதமுதிக துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் விருப்ப மனு தாக்கல் செய்தார். அதில், எந்த தொகுதி என்பதை குறிப்பிடாமல் விருப்ப மனு அவர் தாக்கல் செய்தார். அதேபோல, விஜயகாந்த் போட்டியிட வலியுறுத்தியும் நிறைய பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று முதல் வருகிற 8ம் தேதி வரை நேர்காணல் நடக்கிறது.

Related Stories: