புதுடெல்லி: தாஜ்மகாலுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பார்வையாளர்கள் அவசரமாக வெளியேற்றபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் வரலாற்று காதல் சின்னமான தாஜ்மகால் அமைந்துள்ளது. தினமும் இதை ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர். நேற்று காலையும் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். காலை 9 மணியளவில் போலீசாரின் அவசரப் பிரிவுக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவன், ‘தாஜ்மகாலில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.