அவனியாபுரம்: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இருந்து நேற்று மதுரை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆர்டிபிசிஆர் சோதனை என்ற மிகப்பெரிய வியூகத்தால் தமிழகத்தில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரிப்பை கவனித்து கொண்டுதான் இருக்கிறோம். தமிழகத்தில் தொடர்ந்து தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக, மிக குறைவு என மருத்துவக்குழுவினர் கூறுகின்றனர்.