பெங்களூரு: கர்நாடகா மாநிலம், சிக்கப்பள்ளாபுரா மாவட்டம், குடிபண்டே தாலுகாவில் உள்ளது ஹிரேநாகவள்ளி கிராமம். இங்கு, ‘ஸ்ரீசாய் ஏஜென்சிஸ்’ என்ற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கல்குவாரியில் வெடி வைப்பதற்காக, குடிபண்டேவில் இருந்து வாகனம் மூலம் ஜெலட்டின் குச்சிகளை ஊழியர்கள் ஏற்றி சென்றனர். கல்குவாரி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சி வெடித்து சிதறியது. இதில், அந்த வாகனத்தில் வந்த 6 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.