ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி வந்து நிற்பதும், வாகனங்களை விரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், ஊட்டி - மசினகுடி சாலையில் சீகூர் பாலம் அருகே ஒரு காட்டு யானை வருகிறது. இதை கண்டு இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர். வெகு நேரம் இந்த காட்டு யானை சாலையிலேயே அங்குமிங்குமாக நடக்கிறது. பின்னர், ஒரு கார் மட்டும் யானையை கடக்க முயற்சிக்கிறது.