அரியானா முதல்வர் சர்ச்சை பெட்ரோல் விலை அவ்வளவு பெரிதாக அதிகரிக்கவில்லை

புதுடெல்லி: ‘பெட்ரோல், டீசல் விலை ஒன்றும் அவ்வளவு பெரிதாக அதிகரிக்கவில்லையே’ என அரியானா பாஜ முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத  உச்சத்தை தொட்டுள்ளது. பல பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ கடந்து விட்டது. ஆனால் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ‘பெட்ரோல் விலையா அவ்வளவு ஒன்றும் பெரிதாக உயரவில்லையே’ என்று கூறி சர்ச்சையில்  சிக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘கடந்த 4-5 ஆண்டுகளில் 10-15% அதிகரித்துள்ளது அவ்வளவுதானே. இது ஒன்றும் பெரிய அதிகரிப்பல்ல, இருப்பினும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. எப்படியிருந்தாலும் இதன் மூலம் கிடைக்கும்  வருவாய் மக்களுக்குத்தான் மீண்டும் போய்ச் சேர்ப்போகிறது. அரசுக்கு எந்த வகையில் வருவாய் வந்தாலும் மக்களுக்குத்தானே திரும்பச் செல்லப் போகிறது’’ என்றார். இது சர்ச்சையாகி உள்ளது.

Related Stories: