சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் 162வது பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், பாண்டியராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி, அரசு துறை அதிகாரிகள், சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி ஆகியோர் பங்கேற்று சிங்காரவேலர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவும் கலந்து கொண்டு சிங்காரவேலர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனால் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.