புள்ளிமானை வேட்டையாடிய மூவர் கைது: துப்பாக்கி பறிமுதல்

கூடலூர்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி தாலுக்கா புல்பள்ளி வனச்சரகத்தில் ஒரு கும்பல் மான் வேட்டையாடுவதாக வன அலுவலர் ரஞ்சித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர்கள் ஆசிப், சுனில்குமார் மற்றும் வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ராசானக்கர வனப்பகுதியில் கார் ஒன்றில் வந்து மான் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்தனர்.

அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட புள்ளிமான், துப்பாக்கி, குண்டுகள், கையெறி குண்டு, கத்தி மற்றும் கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் கள்ளிக்கோட்டை மாவட்டம்  குண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (39), குமார் (36), ரித்தீஷ் (37) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: