கூடலூர்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி தாலுக்கா புல்பள்ளி வனச்சரகத்தில் ஒரு கும்பல் மான் வேட்டையாடுவதாக வன அலுவலர் ரஞ்சித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர்கள் ஆசிப், சுனில்குமார் மற்றும் வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ராசானக்கர வனப்பகுதியில் கார் ஒன்றில் வந்து மான் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்தனர்.