இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் வாயிலாக தொடங்கியது. விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 18 ஆயிரத்து 915 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 211 பேர் விண்ணப்பக் கட்டணமும் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இன்றுடன் (மே 20) விண்ணப்ப பதிவு நிறைவடைகிறது. மாணவர்கள் இன்று மாலை வரை www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.