கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற புதிய விதிப்படி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் பீகார் தேர்தல் நடந்தது. தமிழகத்திலும் இந்த அடிப்படையில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி மூன்றில் ஒரு பங்கு வாக்குச்சாவடிகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 1475 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 536 புதிய வாக்குச்சாவடிகளால் மொத்த எண்ணிக்கை 2011 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தை கூட்டி கலெக்டர் விஷ்ணு விவாதித்தார்.