பெங்களூரு: திப்புசுல்தான் குறித்து தவறான விமர்சனம் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே மற்றும் முன்னாள் மாநில அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது, மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த திப்புசுல்தானுக்கு கவுரவம் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ம் தேதி திப்பு ஜெயந்தி விழா கொண்டாடும் அரசாணை வெளியிடப்பட்டது. பின் திட்டமிட்டப்படி விழாவும் கொண்டாடப்பட்டது. மாநில அரசின் முடிவை விமர்சனம் செய்ததுடன் திப்புசுல்தான் குறித்து கீழ்தரமாக விமர்சனம் செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே மற்றும் முன்னாள் மாநில அமைச்சர் சி.டி.ரவி ஆகியோர் மீது ஆலம்பாஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.