ரேபரேலி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீது, ரேபரேலி காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதி எம்பியாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி உள்ளார். இந்நிலையில், ரேபரேலி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அதிதி சிங் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு கருத்துகளை கூறி, அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும் பாஜகவை சேர்ந்த உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதாரவாகவும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘என்னுடைய அரசியல் குரு முதல்வர் யோகி ஆதித்யநாத். ரேபரேலி தொகுதி நில ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக அவர் என்னுடன் பேசியுள்ளார்.