கிருஷ்ணகிரி: திருப்பூரில் இருந்து டெல்லிக்கு ரூ.3 கோடி மதிப்பிலான 150 பண்டல் துணிகளை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சவுகின் (27) என்பவர் ஓட்டி சென்றார். கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையான காளிக்கோவில் அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அங்குள்ள துரைஏரி பேருந்து நிறுத்தம் அருகே நள்ளிரவு 12 மணிக்கு வந்தபோது, லாரியில் இருந்து புகை வருவதை பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பார்த்தனர். இதையடுத்து, லாரியை முந்தி சென்று ஓட்டுனரிடம் தகவல் கூறினர். உடனே டிரைவர் சவுகின், சாலையோரம் லாரியை நிறுத்தியபோது கன்டெய்னரில் இருந்து அதிகளவில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.