அண்ணாநகர்: நொளம்பூர் வாவின் ரோடு மங்கள் ஏரி பார்க் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில், 2 பேர் மது போதையில் சாலையோரம் ஒரு சடலத்தை தீயிட்டு எரித்துக்கொண்டு இருந்தனர். தகவலறிந்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த எலி (எ) சிவக்குமார் (27), அம்பத்தூரை சேர்ந்த விஷ்ணு (33), பாஸ்கர் (44) ஆகிய மூவரும் நொளம்பூர் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள், தினசரி இரவில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதும் வழக்கம்.