புதுடெல்லி: அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து, ‘பைசர்’ என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு முதலில் இங்கிலாந்து அனுமதி அளித்தது. பின்னர், அமெரிக்காவிலும் இந்த மருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இந்தியாவிலும் இந்த மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி கோரி, கடந்த டிசம்பரில் பைசர் நிறுவனம் விண்ணப்பம் செய்தது. இந்தியாவில் கோவிஷீல்டு, ேகாவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் முன்பாகவே, இந்த அனுமதி கேட்டு பைசர் விண்ணப்பித்தது.