கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணிபுரியும் போலீசாருக்கு பெட்டிகுப்பம் ஊராட்சி சாமிரெட்டிகண்டிகை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மனவள புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் தலைமை தாங்கினார். மனவள புத்தாக்க பயிற்சியில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், பாதிரிவேடு காவல் நிலைய காவலர்கள், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள், கும்மிடிப்பூண்டி போக்குவரத்து காவல் நிலைய காவலர்கள், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவலர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஏடிஎஸ்பிக்கள் முத்துசாமி, மீனாட்சி பங்கேற்று சிறப்புரையாற்றினர்.