லக்னோ: விமான நிலையத்தில் தனது ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பிரதமர் மோடியின் தம்பி அங்கேயே 2 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். பிரதமர் மோடியுடன் பிறந்த சகோதரர்களில் அதிகம் அறியப்பட்டவர் பிரகலாத் மோடி. இவர் மோடியின் இளைய சதோதரர். இவர் நேற்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ விமான நிலையம் வந்தார். அப்போது, அவரை வரவேற்பதற்காக வந்த ஆதரவாளர்களை உள்ளே நுழைய போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட பிரகலாத் மோடி, விமான நிலையத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.