பெங்களூரு: குழந்தையுடன் சென்ற தாயை பலாத்காரம் செய்ய முயற்சித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். ரெய்ச்சூர் மாவட்டம் லிங்கசகூரு தாலுகா சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் திருமணமான பெண். இவர் சம்பவத்தன்று மதியம் தனது மூன்று வயது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது மருத்துவமனையின் முன் வாகனத்தை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிப்பது போல் நாடகமாடிய வாகன ஓட்டுனர் பாகல்கோட்டை சேர்ந்த சங்கரப்பாமுலகுந்தா என்பவர் பெண் கையில் இருந்த குழந்தையை பறித்துக்கொண்டு கரும்பு தோட்டத்துக்குள் சென்றார்.