சென்னை: சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு ஆதரவாக பேனர் வைத்த திருநெல்வேலி மாவட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். 4 ஆண்டு தண்டனை முடிந்து நேற்று காலை சசிகலா விடுதலையானார். சசிகலா விடுதலையையொட்டி, அவருக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டத்தில் சுப்ரமணிய ராஜா என்பவர் வரவேற்பு பேனர் வைத்திருந்தார். இதையடுத்து சுப்ரமணிய ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.