நெல்லூர்: நெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். நெல்லூர் மாவட்டம் இசக்கபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதிக்கு 15 படகில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தனர். தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி ஆந்திர மீனவர்கள், தமிழக மீனவர்களை விரட்டி சென்றனர். விரட்டிச் சென்று 180 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 15 படகுகளையும் கைப்பற்றினர். தகவல் அறிந்து வந்த போலீசார், சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.