புதுடெல்லி: திருவனந்தபுரம், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு ஆகிய 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கடந்த 2019 பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, கடும் போட்டிகளுக்கு இடையே அதானி குழுமத்துக்கு இந்த விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமம் கிடைத்தது. இதனால், லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.