வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மராட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டுராவ். இவருக்கு சொந்தமான விவசாய கிணறு வெள்ளக்குட்டை - நிம்மியம்பட்டு செல்லும் சாலையில் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் சாக்குமூட்டை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியோடு கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையை மீட்டனர். அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பால்வாடி தெருவை சேர்ந்த நாகராஜ்(30) என்பது தெரியவந்தது. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கோகிலா(35) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், கோகிலாவை பிடித்து விசாரித்தனர். அதில் கோகிலா, நாகராஜ் தலையில் கல்லைபோட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கோகிலா, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: என் கணவர் இறந்துவிட்டார். எங்களுக்கு 2மகள்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் எனக்கும், நாகராஜிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.