பொன்னேரி: சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஞாயிறு ஊராட்சியில் திமுக ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வசேகரன் ஏற்பாட்டில், நேற்று மாலை மக்கள் சபை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவரிடம், அதிமுக ஆட்சியில் தங்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லை. கழிப்பிடம், சாலை, சுடுகாட்டு பாதை, எரிமேடை, முதியோர் உதவித்தொகை, அரசு பள்ளி கட்டிடம், மகளிருக்கான சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கிராம மக்கள் மனு அளித்தனர்.