பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் பாஜ ஆட்சியின் மூன்றாவது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு நேற்று நடந்தது. இதில், புதிதாக 7 பேர் பதவியேற்றனர். கர்நாடகாவில் கடந்தாண்டு ஜூலையில் எச்.டி.குமாரசாமி தலைமையில் செயல்பட்ட மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதையடுத்து, பாஜ ஆட்சி அமைத்தது. முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். 26 நாட்களுக்குப்பிறகு கடந்த 2019 ஆகஸ்ட் 20ம் தேதி முதல் கட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. இதில் 17 பேர் பதவியேற்றனர். இரண்டாவது கட்ட விரிவாக்கம், கடந்தாண்டு பிப்ரவரி 5ல் நடந்தது.