6 மாவட்ட மக்கள் கிராம சபைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராம சபைக் கூட்டம் 6 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு நடைபெறும். வரும் 18ம் தேதி காலை, தருமபுரி பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, காரிமங்கலம் ஒன்றியம் மற்றும் பைகபள்ளி ஆகிய பகுதிகளிலும் அன்று மாலை சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி, கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் குரும்பப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெறும்.19ம் தேதி காலை நாமக்கல் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி, பள்ளிப்பாளையம் ஒன்றியம் மற்றும் பாகரை ஊராட்சி ஆகிய பகுதிகளிலும் அன்று மாலை புதுக்கோட்டை விராலிமலை சட்டமன்ற தொகுதி, விராலிமலை ஒன்றியம் மற்றும் விராலிமலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெறும். அதேபோல், 20ம் தேதி தேனி போடி சட்டமன்ற தொகுதி, தேனி ஒன்றியம் மற்றும் கொடுவிலார்பட்டி ஊராட்சி ஊராட்சி ஆகிய பகுதிகளிலும் அன்று மாலை மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதி, திருமங்கலம் ஒன்றியம் மற்றும் ஆ.கொக்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெறும்.

Related Stories: