தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு விரட்டச்சென்ற விவசாயிகளை திருப்பி துரத்திய யானை கூட்டம்: தடுமாறி விழுந்ததில் 6 பேர் காயம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள ராகி, நெல், தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்கள், தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், அய்யூர் வனப்பகுதியில் இருந்து வந்த யானை கூட்டம், இரவு நேரங்களில் இந்த பயிர்களை நாசம் செய்து வந்தன. நேற்று முன்தினம் இரவு, 20க்கும் மேற்பட்ட யானைகள் ராகி, கரும்பு தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள், தீப்பந்தத்துடன் யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது, திடீரென ஆக்ரோஷமடைந்த யானைகள், விவசாயிகளை துரத்தின. இதனால், பயந்து போன விவசாயிகள், யானைகளிடம் இருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அப்போது, தடுமாறி விழுந்ததில், விவசாயிகள் 6 பேர், காயமடைந்தனர்.

Related Stories: