நாகை: நாகையில், தங்கை வீட்டுக்கு நடந்த சென்ற விதவை பெண்ணை தூக்கிச்சென்று கோயிலுக்குள் வைத்து கூட்டாக பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டத்தை சேர்ந்த 40 வயது விதவை பெண் கட்டிட வேலைசெய்துவந்தார். இவரது கணவர் இறந்து விட்டார். 16,13 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் அந்த பெண்ணை திடீரென பைக்ககில் வந்த 2 பேர் வழிமறித்தனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் வாயை துணியால் பொத்தி பைக்கில் உட்காரவைத்து, அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குள் சென்றனர். கோயிலில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால், சிலைக்கு பின்பக்கம் வைத்து கூட்டாக மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதன்பின், யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று அரிவாளை காட்டி மிரட்டிவிட்டு 2 பேரும் பைக்கில் தப்பியோடி விட்டனர்.