பெங்களூரு: மாநிலத்தில் 2021-22ம் கல்வியாண்டில் கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான ஆன்லைன் பதிவு பணி தொடங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் தரமான கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2007-08ம் கல்வி உரிமை சட்டம் (ஆர்டிஇ) கொண்டுவந்தது. இச்சட்டத்தின் படி நாட்டில் இயங்கி வரும் அரசு மானியம் பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஓதுக்கீடு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் இத்திட்டம் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் இருந்தது. கடந்த 2017-18-ம் கல்வியாண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.