சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்டது மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, மகராஜன் மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட ஏழுமலை கிராமங்கள் உள்ளன. இங்கு 8,500க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை, ஏலம், மிளகு மற்றும் காப்பி எஸ்டேட்களில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த மலைக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை தோட்ட பகுதிகளிலும் யானை, காட்டு மாடுகள், சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி நுழைந்து அச்சுறுத்தி வருகின்றன.