வாஷிங்டன்: இங்கிலாந்தை ஆட்டி படைக்கும் புதுவகை கொரோனா வைரஸிடமிருந்து மனிதர்களை பாதுகாக்கும் வலிமை தங்களது தடுப்பூசிக்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக மாடர்னா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸானது இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் அந்த வகை கொரோனா பரவுவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஒரு வருடமாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம், தங்களது தடுப்பூசி புதிய வகை கொரோனா வைரஸிடமிருந்து மனிதர்களை பாதுக்காக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.