ஜேஎன்யு மாணவியை தாக்கியதாக போலீசில் புகார்

புதுடெல்லி: ஜவஹர்லால்நேரு பல்கலையில் (ஜேஎன்யு) ஆய்வு படிப்பு படிக்கும் மாணவியை சக தோழன் அடித்து துன்புறுத்தியதன் பின்னணியில் அடித்த மாணவியுடன் பழகியபடி, மற்றொரு பெண்ணுடன் மாணவர் தனது அறையில் கூத்தடித்த விவகாரம் தெரிய வந்துள்ளது. ஜேஎன்யுவில் பி.எச்டி., படிப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் நல்ல பழக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று வேறொரு பெண்ணுடன் தோழன் தனது விடுதி அறையில் குலாவிக் கொண்டிருப்பதை தோழி நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதையடுத்து இரு பெண்களுக்கும் வாய் வார்த்தை தடித்தது. குறுக்கே புகுந்த மாணவன், தனது தோழியை ரூமுக்கு வந்த பெண் எதிரில் பளார் என அறைந்தும், கடுமையாக தாக்கியும் காயப்படுத்தினார். அங்கிருந்து தப்பிக்க தோழி முயன்றும் விடாமல் மாணவர் தடுத்து நிறுத்தி தாக்குதலை தொடர்ந்துள்ளார். கோபமும், வெறுப்பும் அடைந்த தோழி, இதுதொடர்பாக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories: