செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய தாலுகாக்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், மணிலா, உளுந்து மற்றும் வாழை பயிரிடப்பட்டது. நிவர் மற்றும் புரெவி புயல் மழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. 2 வாரங்களுக்கு மேலாகியும், வேளாண்துறை அதிகாரிகளோ, வருவாய்த்துறையினரோ பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடவில்லை, பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.