வேலூர்: வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் இன்று 23வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன், தனது தாயார் மற்றும் மகளுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு இன்று 23வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலையை சிறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருக்கு சிறை மருத்துவமனையிேலயே குளுக்கோஸ் ஏற்றப்பட்டதுடன், நேற்று மாலை முருகனுக்கு அரிசி கஞ்சி வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டது.