சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் இணைப்பு கால்வாய் வழியாக அனுப்பப்பட்ட தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3,231 மி.கன அடியில் தற்போது 780 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.